மேலும் செய்திகள்
திருவாடானையில் பெட்டிசன் மேளா
20-Dec-2024
- நமது நிருபர் -கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 56 மனுக்களுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, விசாரணை மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது, அதிருப்தி உள்ளவர்களின் மனுக்கள் மீதான, மறு விசாரணை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் நடத்தப்படுகிறது.நேற்று நடந்த குறைதீர் முகாமில், குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக, 76 மனுக்கள் மீது மறுவிசாரணை நடத்தப்பட்டது. அதில் 56 மனுக்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி, சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது. 20 மனுக்களுக்கு, மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி., துணை எஸ்.பி., ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
20-Dec-2024