மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்
13-Jun-2025
கோவை; சூலுார், ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், பத்மாவதி ஐ.ஏ. எஸ்., அகாடமி துவக்க விழா நடந்தது.கர்நாடக மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் கல்பனா தலைமை வகித்து பேசுகையில், ''தன்னம்பிக்கை, போட்டியிடும் திறன், அர்ப்பணிப்பு, சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை, இந்த போட்டி நிறைந்த உலகில், உங்கள் இலக்கை அடைய உதவும், '' என்றார்.கல்லுாரி நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், கல்லுாரி தாளாளர் ஸ்ரீ வித்யா லட்சுமி, செயலர் சாரம்மாள், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் அய்யப்பதாஸ், இயக்குனர் விவேகானந்தர், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
13-Jun-2025