ஜூடோ தெரிவு போட்டி: கல்லுாரி மாணவர் வெற்றி
பொள்ளாச்சி: பாரதியார் பல்கலை ஜூடோ தெரிவு போட்டியில், பொள்ளாச்சி அரசு கல்லுாரி மாணவர் வெற்றி பெற்றார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில், பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான ஜூடோ தெரிவு போட்டி நடந்தது.இதில், பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் நிகிலன், மூன்றாம் பரிசு பெற்றார்.பரிசு பெற்ற மாணவரை, கல்லுாரி முதல்வர் சுமதி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.