தர்மசாஸ்தா கோவிலில் 25ல் கும்பாபிேஷகம்
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிேஷக விழா வரும், 25ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி, குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர், தர்மசாஸ்தா, வீரமாட்சியம்மன், பாலமுருகன் கோவிலில், கும்பாபிேஷக விழா நாளை, (24ம் தேதி) காலை, 8:00 மணிக்கு மங்கள இசை, மஹா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, கோ பூஜை, தன பூஜை, நவக்கிரக ேஹாமம், வாஸ்துசாந்தி, மதியம், 12:00 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில், அங்குரார்பணம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசமும்; இரவு, 7:00 மணிக்கு முதற்கால யாக பூஜை, இரவு, 8:30 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனையும் நடக்கிறது.வரும், 25ம் தேதி காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷா பந்தனம், நாடி சந்தானம், காலை, 9:15 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனையும்; காலை,9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு விநாயகர், பாலமுருகன், தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிேஷகமும், மஹா அபிேஷகம் நடக்கிறது.விழாவையொட்டி மதியம், 12:00 மணிக்கு மஹா அன்னதானம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா கோவில் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.