உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இ-பைலிங் நடைமுறை சிக்கலை களைய வக்கீல்கள் உண்ணாவிரதம்

 இ-பைலிங் நடைமுறை சிக்கலை களைய வக்கீல்கள் உண்ணாவிரதம்

பொள்ளாச்சி: இ-பைலிங் முறைக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நேரடியாக மனுக்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யாமல், 'இ-பைலிங்' முறையில், மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதற்குரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, கடந்த, 2ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை வக்கீல்கள், கோர்ட் பணிகளில் இருந்து விலகி இருந்தனர். நேற்று, இ-பைலிங் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.வக்கீல் சங்க தலைவர் துரை தலைமை வகித்தார். செயலாளர் உதயகுமார், துணை தலைவர் பிரபு, இணை செயலாளர் அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில், இ-பைலிங் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். போதிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை