உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகள்

உடுமலை : அரசு பள்ளி மாணவர்களுக்கு, வட்டார அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள், வரும் 18, 19ம் தேதிகளில் நடக்கிறது.அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், இலக்கிய மன்றங்கள் மற்றும் வினாடிவினா மன்றமும் செயல்படுகிறது. மாணவர்களின் இலக்கிய போட்டித்திறன்களை வெளிப்படுத்துவத்கும், பொது அறிவு சார்ந்த போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்துவதற்கும் இவ்விரண்டு மன்றங்கள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றம், வினாடிவினா மன்றத்தில் வட்டார அளவிலான போட்டிகள் நடத்த கல்வித்துறை அறிவித்துள்ளது.ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கதை கூறுதல், கட்டுரை, பேச்சு, கவிதை, போட்டிகளுக்கான தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். வட்டார அளவிலான வினாடிவினா போட்டிகள், டிச., 2 மற்றும் 3ம்தேதிகளில் நடக்கிறது. முதற்கட்டமாக பள்ளி அளவில் நடத்தப்பட்டு, அதை தொடர்ந்து வட்டார அளவில் நடத்தப்படுகிறது.போட்டிகளில் ஈடுபடுத்துவதற்கு, ஊக்கப்படுத்த வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !