மேலும் செய்திகள்
மாகாளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்
11-Jan-2025
சூலுார்; சோமனுார் அடுத்த ராமாச்சியம் பாளையம் மாகாளியம்மன் கோவில் அறங்காவலர்களாக சின்னசாமி, அனிதா, குமார் ஆகியோரை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் நியமித்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், உதவி கமிஷனர் இந்திரா முன்னிலையில் அறங்காவலர்கள் பொறுப்பேற்றனர். தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவராக சின்னசாமி தேர்வு செய்யப்பட்டார்.
11-Jan-2025