உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபி ேஷக விழா வரும், 3ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா வரும், 31ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், சாந்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. வரும், நவ. 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு முதல் கால யாக பூஜை, யாக சாலை பிரவேசம், அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 2ம் தேதி காலை, 8:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு அபிேஷகம், விமானங்களுக்கு சிறப்பு பூஜை, மாலை, 4:15 மணிக்கு நான்காம் வேள்வி பூஜை நடக்கிறது. வரும், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும், காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை யாத்ரா தானம், கடம், கலசங்கள் புறப்படுத்தல், மூன்று விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. அதன்பின், காலை, 10:00 மணிக்கு மஹா நிவேதனம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு பஜனை பாடல்கள், மாலை, 5:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை, ஜெய் அனுமான் சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி