சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது
சூலுார்; மதுரையை சேர்ந்தவர் ராபர்ட் கிளைவ், 47. சூலுாரில் தங்கி, மில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும், 13 வயது சிறுமியுடன் பழகி, ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.சிறுமியின் பெற்றோர் சூலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், திருப்பூரில் பதுங்கியிருந்த ராபர்ட் கிளைவை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.