உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை உற்சவம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை உற்சவம்

தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அதிகாலை, 4:00 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு மார்கழி பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஸ்னபன பூஜைகள், மாணிக்கவாசகருக்கு அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, காலை, 9:40 மணிக்கு, ஸ்ரீ சிவகாமி உடனமர் நடராஜப் பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும், மங்கள வாத்தியங்கள் முழங்க காப்பு கட்டப்பட்டது.தொடர்ந்து, திருவெம்பாவை விண்ணப்பம் செய்யப்பட்டு, நடராஜ பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மகா தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து, மாணிக்கவாசகர் திருவீதியுலா நடந்தது.இன்று முதல் தொடர்ந்து, 9 நாட்களும், காலையும், மாலையும் திருவெம்பாவை விண்ணப்பம் மற்றும் மாணிக்கவாசகர் திருவீதியுலா நடக்கிறது. மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பத்தாம் நாளான, வரும், ஜன., 13ம் தேதி, ஆருத்ரா தரிசன காட்சி நடக்கிறது.திருவாதிரை உற்சவ துவக்கத்தையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ