உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வரும், 13ல் துவக்கம்

மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வரும், 13ல் துவக்கம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும், 13ம் தேதி துவங்குகிறது. மார்ச் 6ம் தேதி தேரோட்டம் துவங்குகிறது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, வரும், 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.வரும், 19ம் தேதி இரவு, அணி எடுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 20ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல், 21ம் தேதி காலை, 6:00 மணிக்கு கரியகாளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், வரும், 23ம் தேதி இரவு, கரியகாளியம்மன் கடைசிநாள் அபிேஷகம் நடக்கிறது.வரும், 27ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல், மார்ச் 1ம் தேதி, வெளிப்பூவோடு ஆரம்பம், இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச்., 2ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல், மார்ச் 3ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி., பூவோடு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், தினமும் இரவு பொதுமக்கள் பூவோடு வழிபாடு நடக்கிறது. 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.மார்ச் 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகுடம் வைத்தல் பூஜை, 6ம் தேதி காலை, மாவிளக்கு, மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று, இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 7ம் தேதி இரவு, இரண்டாம் நாள் தேரோட்டம், 8ம் தேதி இரவு, மூன்றாம் நாள் தேரோட்டமும், தேர்நிலைக்கு வருதல், தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.மார்ச் 9ம் தேதி காலை, 8:30 மணிக்கு, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல்; 11ம் தேதி இரவு மஹா அபிேஷகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி