உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேசிய அளவிலான கராத்தே: கற்பகம் வீரர்களுக்கு பதக்கம்

 தேசிய அளவிலான கராத்தே: கற்பகம் வீரர்களுக்கு பதக்கம்

கோவை: டில்லியில் 45வது தேசிய அளவிலான கராத்தே போட்டி, நான்கு நாட்கள் நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் கற்பகம் பல்கலை மாணவர் விக்ரம், 65 கிலோ எடை பிரிவிலும், மாணவர் ஸ்ரீராம், 84 கிலோ எடை பிரிவிலும் பங்கேற்றனர். அபார திறமையை வெளிப்படுத்திய மாணவர் விக்ரம் தங்க பதக்கமும், மாணவர் ஸ்ரீராம், 84 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், சீனியர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பல்கலை நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி