உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலையில் மாற்றமில்லை

இளநீர் விலையில் மாற்றமில்லை

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, தாளவாடி மற்றும் கர்நாடகா சந்தைகளில் இளநீர் ஓட்டில் கருப்பு காணப்படுவதால், அதனை கொள்முதல் செய்ய வட மாநில வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். மாறாக, பொள்ளாச்சி, உடுமலை, மற்றும் தேனி பகுதிகளில் உற்பத்தியாகும் இளநீரை விரும்பி வாங்குகின்றனர். தற்போது, கர்நாடக மாநில சந்தையில் இளநீர் வரத்து மிகவும் குறைந்தே காணப்படுகிறது.அனைத்து பகுதிகளிலும், இந்த வாரம் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை