இளநீர் விலையில் மாற்றமில்லை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பச்சை இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதால், கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எக்காரணத்தைக் கொண்டும், பச்சை இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.தாளவாடி பகுதியிலும் கர்நாடகா சந்தைகளிலும் இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ள நிலையில் தரம் இன்றியும் காணப்படுகிறது. கடந்த பல மாதங்களாக, சிவப்பு இளநீர் வரத்து இன்றி காணப்பட்டது. தற்போது, வரத்து துவங்கியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.