உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாகனம் நிறுத்த இடமில்லை; சுற்றுலா பயணியர் தவிப்பு

 வாகனம் நிறுத்த இடமில்லை; சுற்றுலா பயணியர் தவிப்பு

வால்பாறை: வால்பாறை நகரில் பார்க்கிங் வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வந்து செல்கின்றனர். அவர்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல், ரோட்டோரத்தில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், நகரில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது: சுற்றுலா பயணியர் வருகையால், வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 'ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களை போல, வால்பாறையிலும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். வால்பாறை படகு இல்லம், ஸ்டேன்மோர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலாவாகனங்கள் பார்க்கிங் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ