ரோடு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
கோவை: மாநகராட்சி பகுதிகளில், 24 மணி நேர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. இப்பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், வடக்கு மண்டலம், 18வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம், தயாள் வீதி மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக, தோண்டப்பட்ட ரோடுகளை உடனடியாக சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாநகர நல அலுவலர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.