ஓய்வூதியர் போராட்டம்
கோவை; கோவையிலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு முன், பென்ஷனர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 23 மாத காலம் கடந்தவர்களுக்கு, ஓய்வுக்கால பலன், அகவிலைப்படி, மருத்துவகாப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை- திருச்சி சாலையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கு முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று அனைத்து பணிமனைகளுக்கு முன்பும், பென்ஷனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.