உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 46 கி.மீ., துாரம் பயணிக்க 2 மணி நேரமாகுது! பொள்ளாச்சி - கோவை ரயில் பயணியர் அதிருப்தி 

46 கி.மீ., துாரம் பயணிக்க 2 மணி நேரமாகுது! பொள்ளாச்சி - கோவை ரயில் பயணியர் அதிருப்தி 

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இரவு நேர ரயிலில் செல்ல, 46 கி.மீ., தொலைவுக்கு, இரண்டு மணி நேரமாவதால் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சியில் இருந்து, இரவு, 8:50 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு, 10:15 மணிக்கு ரயில் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டது.இந்நிலையில், புத்தாண்டு முதல் ரயில் நேரங்கள் மாற்றப்பட்டன. அதில், இரவு நேரத்தில் இயக்கப்படும் ரயில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 46 கி.மீ., செல்ல, இரண்டு மணி நேரமாவதால் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.ரயில் பயணியர் கூறியதாவது:பொள்ளாச்சியில் இருந்து, இரவு, 8:50 மணிக்கு கிளம்பி, கோவைக்கு, 10:15 மணிக்கு சென்றடைந்தது. இதனால், சென்னை, பெங்களூரு ரயில்களை பிடிக்க முடிந்தது. தற்போது, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் ரயில் நேரம் மாற்றப்படவில்லை; ஆனால், 46 கி.மீ., தொலைவுக்கு இரண்டு மணி நேரம் இயக்கப்பட்டு, கோவைக்கு இரவு, 10:50 மணிக்கு சென்றடைகிறது. இதனால், சென்னை, பெங்களூரு ரயில்களை பிடிக்க முடிவதில்லை.இதே வழித்தடத்தில், மதிய நேரத்தில் கோவை - மதுரைக்கு இயக்கப்படும் ரயில், ஒரு மணி நேரத்துக்குள் பொள்ளாச்சியை அடைகிறது. ஆனால், இரவில் பொள்ளாச்சி - கோவை செல்லும் ரயிலுக்கு இரண்டு மணி நேரம் தேவைப்படுவது புதிராக உள்ளது.மேலும், கோவைக்கு பஸ் மற்றும் வாகனங்களில் சென்றால் கூட ஒரு மணி நேரத்துக்குள் சென்று விடலாம். ரயில் மிக மந்தமாக செல்வதால் யாருக்கும் பயன் இல்லை.தற்போது, புல்லட் ரயில் இயக்கம், ரயில் வேகம் அதிகரிப்பது என முன்னோக்கி செல்லும் நேரத்தில், பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் மட்டும் பின்னோக்கி செல்கிறது.பொள்ளாச்சியில் இருந்து நேரடியாக பெங்களூருக்கு செல்ல ரயில் இல்லாத சூழலில், இரவு கோவை செல்லும் ரயிலை பயன்படுத்தியே, பெங்களூரு சென்றனர். தற்போது, இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டுமென்பதால், இந்த ரயிலை பயணியர் தவிர்க்க நேரிடும்.ரயில் பயணியர் பயன்படுத்தாவிட்டால், இந்த ரயில் சேவை நிறுத்த வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து கோவைக்கு மீண்டும் பழைய நேரமான, இரவு, 10:15 மணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Hassan S
ஜன 09, 2025 10:02

இது அறிவிக்கபட்ட காலதாமதம். அறிவிப்புக்கு முன்பே பல நேரம் காலதமாக சென்று சேரன் விரைவு வண்டியை தவற விட்டதும் உண்டு. அதனால் சேரன் விரைவு வண்டியில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தால்... இந்த ரயிலை நம்பி செல்லமாட்டோம். கொடுத்தும் கெடுத்தான் கதையாகதான் இந்த ரெயில். அதைபோல் காலை செம்மொழி விரைவு ரயிலை பொள்ளாச்சி வரை முன்பதிவில்லாத ரயிலாக கோவையில் இருந்து இயக்குவது மிகவும் பயண்உள்ளதாக இருக்கின்றது. அதன் புறப்படும் நேரம் 5,20 ஐ 5,30 ஆக மாற்றினால் நீலகிரி விரைவு வண்டியில் வந்தவர்கள் இந்த ரயிலில் பயணிக்க வசதியாக இருக்கும். நீலகிரில் வந்து இந்த வண்டிக்கான பயணசீட்டு பெற்று நடை மேடை வருவதற்க்குள் வண்டி கிளம்பிவிடுகின்றது. அதன் நேரத்தையும் காலை 5,30 ஆக மாற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


KAMARAJ M
ஜன 08, 2025 23:24

இரவில் இருட்டாக இருக்கும் அதான் பய போகுது தண்டவாளத்தில் லைட் போடனும்


kumar p
ஜன 08, 2025 16:35

We want to submit the petition to Kovai sitting MLA Mrs.Vanathi Srinivasan and great BJP State Leader Sri.Annamalai IPS to speed the train and reduce the travel time from 2 hrs to 1 hr. Railway dept is under Ruling Sri.Modiji. We can give request to PM cell.


M Ramachandran
ஜன 08, 2025 15:44

பாலக்காடு டிவிஸனிலிருந்து பொள்ளச்சியை தூக்கினால் இதற்கு நல் விளைவு யேற்படும் மலையாளத்தான் மூளை கெடு புத்தி. கெடுத்து கொண்டு தான் இருப்பான்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 08, 2025 09:32

இப்படி தேவையில்லாமல் தாமதம் செய்து மக்களை தவிக்க விடுவதில் நோக்கம் தெரியுமா? பேருந்து உரிமையாளர்கள் கொடுக்கும் பணம்தான். அப்புறம் மக்கள் பயன்படுத்தவில்லை என்று கூறி மற்ற ரயில்களை நிறுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம். அனைத்து இடங்களிலும் லஞ்ச ஊழல் ஊடுருவி விட்டது. மோடிஜி என்னதான் செய்கிறார் என்று தெரியவில்லை.


Dharmavaan
ஜன 08, 2025 07:45

தனியார் பஸ் கொள்ளை அடிக்கவே இந்த தாமதம் கேவலமான ரயில்வே திருடர்கள்


A Viswanathan
ஜன 09, 2025 07:36

இப்படி முடிவு எடுப்பவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து தகுதியானவர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை