உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலிடெக்னிக் மாணவர்க்கான பூப்பந்து போட்டி துவக்கம்

பாலிடெக்னிக் மாணவர்க்கான பூப்பந்து போட்டி துவக்கம்

கோவை: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, மாநில அளவிலான பூப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று துவங்கியது.இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில், நடக்கும் போட்டியை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் துவக்கி வைத்தார். உடற்கல்வித்துறை இயக்குனர் முரளிகிருஷ்ணன் உடனிருந்தார்.இதில் மண்டல அளவிலான போட்டியில், முதலிடம் பிடித்த 11 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த போட்டியில், ஈரோடு மண்டல அணி 2 - 0 என்ற செட் கணக்கில் திருநெல்வேலியையும், மதுரை அணி 2 - 0 என்ற செட் கணக்கில் வேலுார் அணியையும், கோவை மண்டல அணி 2 -1 என்ற செட் கணக்கில் திருச்சியையும், காஞ்சிபுரம் மண்டல அணி 2 - 0 என்ற செட் கணக்கில், நாகை மற்றும் புதுச்சேரி (ஒரே மண்டலம்) அணியையும் வீழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை