விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
வால்பாறை ; வால்பாறை திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர்.இந்த கல்வியாண்டில் பள்ளிகளுக்கு இடையே நடந்த, 17 வயது மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் வென்றனர். அதே போல், 14 வயது மாணவர்களுக்கான கால்பந்து போட்டியிலும் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசை தட்டி சென்றனர்.இதுதவிர, 14 வயது மாணவர்களுக்கான செஸ் போட்டியில் மாணவி ரேஷ்மிகா, கேரம் போட்டியில் மாணவி காவியா ஆகியோர் மாவட்ட அளவில் முதல் பரிசை தட்டி சென்றனர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா பரிசு வழங்கி பாராட்டினார்.