உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., மையம் அமைக்க கோரிக்கை

வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., மையம் அமைக்க கோரிக்கை

வால்பாறை ; சோலையாறு அணைப்பகுதியில் ஏ.டி.எம்., மையம் இல்லாமல், வங்கி வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையில் இருந்து, 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சோலையாறுடேம். இந்த பகுதியை சுற்றிலும், முருகாளி, ேஷக்கல்முடி, புதுக்காடு, கல்யாணப்பந்தல், பன்னிமேடு, சேடல்டேம், இடதுகரை உள்ளிட்ட பகுதிகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மேலும், தமிழக - கேரள எல்லையில் உள்ள சோலையாறு அணையை கண்டு ரசிக்க, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், சோலையாறு அணைப்பகுதியில்,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சார்பில் ஏ.டி.எம்., மையம் இல்லாததால், 28 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு, செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீண் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான சோலையாறு அணைப்பகுதியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சார்பில், ஏ.டி.எம். அமைக்க வேண்டும், என, கடந்த, 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும், சோலையாறு அணைப்பகுதியில் ஏ.டி.எம்., மையம் அமைத்தால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை