உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு மாவட்ட அணிகள் இடம்பெறும் சென்டைஸ் விளையாட்டு போட்டிகள்

நான்கு மாவட்ட அணிகள் இடம்பெறும் சென்டைஸ் விளையாட்டு போட்டிகள்

கோவை; எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 'சென்டைஸ்' எனும் விளையாட்டு போட்டி, நேற்று துவங்கியது.இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.கூடைப்பந்து, எறிபந்து, பால் பேட்மின்டன், வாலிபால், கோ-கோ போட்டிகள் நடந்து வருகின்றன. கல்லுாரி முதல்வர் செந்துாரபாண்டியன், துணை முதல்வர்கள் விவேகானந்தன், தமிழ்செல்வன் ஆகியோர் போட்டிகளை, துவக்கிவைத்தனர்.கோ-கோ போட்டியில், நான்கு அணிகள் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில், அரசு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 20-2 என்ற புள்ளி கணக்கில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., அணியையும், இரண்டாம் போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 17-12 என்ற புள்ளிகளில் நேரு இன்ஜி., அணியையும் வென்றது.கூடைப்பந்து போட்டியில், 13 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் கே.பி.ஆர்., அணி, 20-6 என்ற புள்ளிகளில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி அணி, கொங்கு கல்லுாரி அணி, 30-27 என்ற புள்ளிகளில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.இன்று இறுதிப்போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை