உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்

 எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்

கோவை: சுகாதார பணிகளுடன், எஸ்.ஐ.ஆர். பணிகளையும் கூடுதலாக பார்க்கும் துாய்மை பணியாளர்கள், ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்க(துாய்மை பணியாளர் பிரிவு) பொதுச் செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணிகளில் துாய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி இருப்பது, அதிக பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. காலை, 6:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே அவர்களது பணி நேரம். பணி நேரம் முடிந்த பிறகும் எஸ்.ஐ.ஆர்., பணியை இரவு, 10:00 மணி வரை இவர்கள் பார்க்கின்றனர். துாய்மை பணியாளர்களின் மீது, இதுபோன்று திணிக்கப்படும் பணிச்சுமையை கட்டாயம் குறைக்க வேண்டும். பி.எல்.ஓ., பணியில் ஈடுபட்ட, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

வீடியோ எடுக்குறாங்க!

'உங்களை பார்த்ததே இல்லை; உங்களை நம்பி எப்படி இந்த எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பத்தை தருவது என வீடுகளுக்கு செல்லும் போது கேள்வி கேட்கின்றனர். படிக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாமல் தருகின்றனர்; அத்தாட்சி கேட்டு எங்களை வீடியோ எடுக்கின்றனர்' என, துாய்மை பணியாளர் ஆதங்கமாக பேசும் வீடியோ வைரலாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி