| ADDED : மார் 22, 2024 10:44 PM
விடுமுறையில் சிறப்பு பயிற்சி
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வி தொழில்கல்வி பிரிவு இணை இயக்குனரகம் வாயிலாக, 'நீட்' பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தனியாக வினாத்தாள் தயாரித்து, தினமும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 'ஆன்லைன்' வாயிலாக பாடங்கள் நடத்தப்படும்.ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, பொதுத்தேர்வு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பலர், 'நீட்' தேர்வில் வென்று, மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து கனவை நனவாக்கியுள்ளதை, முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.