மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
15-May-2025
மேட்டுப்பாளையம் : பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில், காரமடை அருகே எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 164 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அபிக்சா, லிதிஷா ஆகிய இருவரும் தலா, 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர்.சம்ரித்தா, 495 பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெய் ஜோவியா, சம்யுக்தா ஆகியோர் தலா, 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல், 20 மாணவர்களும், 450 க்கு மேல், 58 மாணவர்களும், 400 க்கு மேல் 97 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணக்கு பாடத்தில் இருவரும், அறிவியலில் ஏழு பேரும், சமூக அறிவியலில், 11 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், பள்ளி முதல்வர் சசிகலா, செயலர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்விலும், இப்பள்ளி, 100 நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
15-May-2025