உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவமழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

பருவமழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

வால்பாறை; வால்பாறையில் பெய்யும் பருவமழையால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாக, தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை பெய்யும் நிலையில், இடையிடையே வெயிலும் நிலவி வருகிறது.இதனால், கடந்த சில மாதங்களாக துளிர்விடாமல் இருந்த தேயிலை செடிகள், தற்போது மீண்டும் துளிர்விட துவங்கியுள்ளது. தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேயிலை தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் உள்ள, 56 தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், வால்பாறையில் பருவமழைக்கு இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலைக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளதோடு, சூரிய ஒளியும் கிடைக்கிறது. இதனால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் மாதம் வரை தேயிலை உற்பத்தி குறையாது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை