தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நாளை நடக்கிறது
பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை, 28ம் தேதி நடக்கிறது.'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங், 2025 வழிகாட்டி நிகழ்ச்சி, பொள்ளாச்சி மாதவா இன் ேஹாட்டலில் நாளை, 28ம் தேதி நடக்கிறது.கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாலை, 3:00 முதல் 6:00 மணி வரை நிகழ்ச்சி நடக்க உள்ளது.அத்துடன், இந்தாண்டு எந்தெந்த படிப்புகளுக்கு வரவேற்பு உள்ளது, எந்தெந்த பாடங்களுக்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.நிகழ்ச்சியில், 'வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் அஸ்வின், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள்' குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் ஆகியோர் விரிவான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.மாணவர்களே... இன்ஜி., கனவை நனவாக்க, சிறந்த படிப்பு, கல்லுாரியை தேர்வு செய்யவும், கவுன்சிலிங் நடைமுறைகளை அறிந்து கொள்ளவும், இந்நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக அமையும். மிஸ் பண்ணிடாதீங்க!