உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின மக்களிடம்  கலந்துரையாடிய சப்-கலெக்டர் 

பழங்குடியின மக்களிடம்  கலந்துரையாடிய சப்-கலெக்டர் 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, வால்பாறை பழங்குடியின மக்களிடம் சப்-கலெக்டர் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.பொள்ளாச்சி அருகே, வால்பாறை சங்கரன்குடி, உடும்பன்பாறை பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு, சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.அதன்பின், பழங்குடியின மக்களிடம், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், ரேஷன் கார்டு, ஜாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாடு குறித்து பழங்குடியின மக்களிடம் சப்-கலெக்டர் கலந்துரையாடினார்.அவர்களிடம் இருந்து, ஜாதிச்சான்றிதழ் விண்ணப்பங்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆய்வின் போது, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை