எங்களை பார்த்தா திட்டுறே; வாலிபருக்கு விழுந்தது அடி
கோவை; கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் ேஷக் முகமது, 26. தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, தாயாரை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதேபகுதியை சேர்ந்த அக்பர் அலி, 43, மொகைதீன் பாட்சா, 27, அசாரூதீன், 36 ஆகிய மூவரும், ேஷக் முகமது தங்களை திட்டுவதாக தவறாக நினைத்தனர். மூவரும், சேக் முகமுதுவை தகாத வார்த்தைகளால் பதிலுக்கு திட்டி கத்தியால் குத்தினர். ேஷக் முகமது, கடைவீதி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் மூவரிடம் விசாரிக்கின்றனர்.