உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அன்னூர: அன்னூரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது.இங்கு பைரவருக்கென தனி கோவில் உள்ளதால், பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இன்று இரவு 7:00 மணிக்கு, சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது.பைரவருக்கு பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. தீபாராதனை காண்பிக்கப்படுகிறது பக்தர்கள் பங்கேற்று, இறையருள் பெற விழா கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை