உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் போன் பறித்தவர்கள் கைது

மொபைல் போன் பறித்தவர்கள் கைது

பொள்ளாச்சி; மாணவரை தாக்கி, மொபைல் போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தைச் சேர்ந்தவர் அசோக். தனியார் கல்லுாரி மாணவரான இவரை, மர்ம நபர்கள், வழிமறித்து அடித்து, வெள்ளி செயின் மற்றும் மொபைல்போனை பறித்துச்சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சிபி, 22; தனியார் கல்லுாரி மாணவர், 17 என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை