உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் சந்தையில் ரூ.1.84 கோடி வர்த்தகம்

உழவர் சந்தையில் ரூ.1.84 கோடி வர்த்தகம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 1.84 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், உழவர் சந்தையில் காய்கறி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த மாதம், ஒரு கோடியே, 84லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:உழவர் சந்தைக்கு கடந்த மாதத்தில், நாளொன்றுக்கு, 5 லட்சத்து, 96 ஆயிரத்து, 14 ரூபாய் மதிப்புள்ள, 15,706 கிலோ காய்கறிகள் வரத்து இருந்தது. ஒரு நாளுக்கு, 61 விவசாயிகளும், 3,141 நுகர்வோர்களும் வந்தனர்.கடந்த மாதத்தில், மொத்தம், 486.9 மெட்ரிக் டன் காய்கறி வரத்து இருந்தது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 84 லட்சத்து, 76 ஆயிரத்து, 445 ரூபாயாகும். மொத்தம், 1,909 விவசாயிகள் வந்ததுடன், 97 ஆயிரத்து, 381 நுகர்வோர்கள் வந்து இருந்தனர்,'' என்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கத்தால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், கணிசமான விலை கிடைத்தது. குறிப்பாக, தேங்காய்க்கு அதிக விலை கிடைத்தது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை