உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மழை பொழிவு இல்லாததால் நீர்நிலைகளில் நீர்வரத்து சரிவு

 மழை பொழிவு இல்லாததால் நீர்நிலைகளில் நீர்வரத்து சரிவு

வால்பாறை: வடகிழக்குப் பருவமழை பெய்யாததால், வால்பாறையில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து சரிந்துள்ளது. வால்பாறையில் கடந்த ஆண்டு மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. தொடர் மழையால், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இந்நிலையில் கடந்த ஆண்டு அக். மாதம் முதல் இரண்டு மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்தது. கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்தது. வடகிழக்குப் பருவமழை பெய்யாததால், அணைகளுக்கும், நீர்நிலைகளிலும், நீர்வரத்து குறைந்துள்ளது. சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில் நேற்று காலை, 124.46 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 159 கனஅடி நீர்வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 170 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ