உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர் சேர்ப்பு: தேர்தல் கமிஷனுக்கு மனு

வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர் சேர்ப்பு: தேர்தல் கமிஷனுக்கு மனு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் வாக்காளர்களை முறைகேடாக இடமாற்றம் செய்த பட்டியலை நிராகரிக்கக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். மனு விவரம்: சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் 14 வது வார்டு தி.மு.க., வேட்பாளர் கலைவாணன் 12வது வார்டிலிருந்து 45 வாக்காளர்களை 14வது வார்டுக்கு விருப்ப மனு கொடுக்கச் செய்து மாற்றியுள்ளார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானதாகும். இது குறித்து ஆர்.டி.ஓ.,வும், செயல் அலுவலரும், ஒருவரை ஒருவர் காரணம் காட்டி உண்மை நிலையை மறைத்து வருகின்றனர். மேலும் வேட்பாளர்களுக்கு முழுமையான இறுதியான வாக்காளர் பட்டியலை தர மறுத்து வருகின்றனர். எனவே முழுமையான இறுதியான வாக்காளர் பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்கவும், தேர்தல் அலுவலர்கள் முறையாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றி செயல்படவும் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை