உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றம்

கடலூர் : கடலூரில் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் அகற்றினர். கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் இருபுறமும் லாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதனையொட்டி டி.எஸ்.பி., வனிதா உத்தரவின் பேரில், போக்குவரத்து பிரிவு போலீசார், நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த லாரி உள்ளிட்ட வாகனங்களை 'ரெக்கவரி' வாகனம் மூலம் அப்பறப்படுத்தினர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ