உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீழ்மாம்பட்டு அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கீழ்மாம்பட்டு அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

நடுவீரப்பட்டு: கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 38 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி தொடர்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அதற்கு துணையாக இருந்த ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி பாராட்டினார்.அதுபோல் புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை