உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் திருவிழா நடத்துவதில் கோஷ்டி மோதல் 5 பேரின் மண்டை உடைப்பு : போலீஸ் குவிப்பு

கோவில் திருவிழா நடத்துவதில் கோஷ்டி மோதல் 5 பேரின் மண்டை உடைப்பு : போலீஸ் குவிப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேரின் மண்டை உடைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஊராட்சி தலைவர் பிரவின்குமார் மற்றும் த.வா.க.நிர்வாகி ராஜி இடையே பிரச்னை இருந்தது.இதனால் கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ., தடை விதித்தார்.அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.தற்போது சாகை வார்த்தல் விழா நடத்த இரண்டு கோஷ்டியினரும் தனித்தனியாக ஊரில் வசூல் செய்தனர். பிரவின்குமார் கோஷ்டி சார்பில் வரும் 16ம் தேதி திருவிழா நடத்த போவதாக அறிவித்தனர்.அதற்காக நேற்று கோவில் வளாகத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்ய வந்தனர்.இதையறிந்த ராஜியின் ஆதரவாளரும் பா.ம.க.ஒன்றிய செயலாளருமான மூர்த்தி கோவிலை பூட்டி சாவியை எடுத்து சென்றார். இதனால் ஆத்திரமடைந்த பிரவின்குமார் ஆதரவனாளர்கள் கோவில் வளாகத்தில் கூடினர். அப்போது ராஜி ஆதரவாளர்களும் கூடியதால் வாய்தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.இதில் இரண்டு கோஷ்டியையும் சேர்ந்த 5 பேருக்கு மண்டை உடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ