கடலுார் : மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்தும், கடலுாரில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்பபாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, மீனவரணி தங்கமணி, ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் வரவேற்றார்.கூட்டத்தில் விழுப்புரம் பிரித்விராஜ், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி, கடலுார் பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், கெமிக்கல் மாதவன், கந்தன், வினோத் ராஜ், கனகராஜ், ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ஸ்ரீநாத், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் குப்புராஜ், வர்த்தக பிரிவு வரதராஜன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, தமிழ்ச்செல்வன், நாகபூஷணம், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் அழகானந்தம் நன்றி கூறினர்.