உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பயணிகள் தவிப்பு

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பயணிகள் தவிப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் பஸ் நிலைய நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளதால், பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளது. மேலும், குக்கிராமங்களுக்கும் பஸ்கள் செல்வதால் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து ஸ்டால்கள், விளம்பர போர்டு, பெட்டிகளை அடுக்கி அதன் மீது பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பயணிகள் நிற்க இடமின்றி மிகவும் சிரமமடைகின்றனர்.அதுபோல், போக்குவரத்துக் கழக ஊழியர்களும் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை