உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாநடந்தது.விழாவையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரிக்குஅபிஷேகம் நடந்தது. இதையடுத்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்குஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணியளவில்மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் ஆனந்ததாண்டவம் நடந்தது. சுவாமி மூன்று முறை முன்னும், பின்னும் நடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ