உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அகில இந்திய போட்டிகளில் சிதம்பரம் மாணவர்கள் பங்கேற்பு

அகில இந்திய போட்டிகளில் சிதம்பரம் மாணவர்கள் பங்கேற்பு

கிள்ளை: மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டி, தனித்திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்குட்பட்ட உறுப்பு கல்லுாரி அணிகளுக்கு இடையே, மண்டல அளவிலான பூப்பந்துப்போட்டி, தனித்திறன் போட்டி, நீண்ட துாரம் ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகளில் சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் 8 பேர் வெற்றிபெற்று, அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பங்குபெற்றனர்.சாதனை மாணவர்களை, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர் நாராயணசாமி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை