| ADDED : ஜூன் 14, 2024 06:38 AM
சிதம்பரம்: சிதம்பரம் 33 வது வார்டு நேரு நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று 60க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.பொதுமக்கள் சப் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:நாங்கள் சிதம்பரம் நகராட்சி 33 வது வார்டில் உள்ள நேரு நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் 55 வீடுகள் உள்ளன. நேரு நகர் முகவரியில் தான் எங்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண அட்டை, வரி ரசீது ஆகியவைகள் இருக்கிறது.நாங்கள் இருக்கும் இடம் மடங்களுக்கு சொந்தமானதாகும். சிதம்பரம் அரசு மருத்துவமணையும் மேற்கண்ட மடங்களில் இடங்களில் தான் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், அன்றைய மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு.மருத்துவமனையில் ஆய்வு செய்து, விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி மருத்துவமணை வளாகத்திற்குள் கட்டடங்கள் கட்டும்பணியும், மருத்துவமணை விரிவாக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.சென்னை ஐக்கோர்ட்டில் இது குறித்து பொது நல வழக்கு தொடர்ந்தவர் ஏழைகள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையின் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பால் விரிவாக்கம் தடைபடுகிறது என்ற பொய்யான தகவலை கொடுத்துள்ளார். சென்னை ஐக்கோர்ட்டில் உண்மை நிலையை மறைத்து, தனி நபர் போட்ட பொது நல வழக்கால், கலெக்டர், டி.ஆ.ஓ.,உள்ளிட்ட அதிகாரிகளிடம், நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளனர். எனவே மருத்துவமணைக்கு எந்த விதத்திலும் தொந்தரவு இல்லாமல், மருத்துவமணை சுற்று சுவருக்கு வெளியே பல்லாண்டுகாலம் வாழும் எங்கள் வீடுகளை பாதுகாத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட சப் கலெக்டர் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.அப்போது நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகர செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.