உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கவனிப்பு இல்லாததால் காங்., ம.தி.மு.க., கடுப்பு

கவனிப்பு இல்லாததால் காங்., ம.தி.மு.க., கடுப்பு

மந்தாரக்குப்பம், : சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்., ம.தி.மு.க.,உள்ளிட்ட கட்சியினருக்கு கவனிப்பு இல்லாததால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவன் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு திருமாவளவன் மந்தாரக்குப்பம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தி.மு.க., கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு தடல்புடல் கவனிப்பு உள்ள நிலையில், காங்., ம.தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு கவனிப்பு இல்லாததால் கடும் அதிருப்தி அடைந்து, தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் இல்லாதவர் களாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ