உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அழுகிய நிலையில் பெண் சடலம்

அழுகிய நிலையில் பெண் சடலம்

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் பின்புறம் தைல மர தோப்பில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. போலீஸ் விசாரணையில் அப்பெண் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் பிச்சை எடுத்து வந்தது தெரிய வந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.போலீசார் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ