உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கூ.தென்பாதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை அவர்களது வீடுகளிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு அளித்தனர்.சேத்தியாத்தோப்பு அருகே கூ.தென்பாதி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், தலைமை ஆசியர் இந்திரா, பள்ளிக்குழு தலைவர் ரவிச்சந்திரன், இடநிலை ஆசிரியர் அங்கயற்கண்ணி ஆகியோர் மாணவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து மேல தாளங்களுடன் அழைத்து வந்து பள்ளியில் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.கிராம பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை