உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புனித உத்தரிய மாதா ஆலய தேர் பவனி

புனித உத்தரிய மாதா ஆலய தேர் பவனி

விருத்தாசலம்: அரசகுழி புனித உத்தரிய மாதா ஆலய தேர் பவனி நடந்தது.விருத்தாசலம் அடுத்த அரசகுழியில் உள்ள புனித உத்தரிய மாதா ஆலயத்தில், 62ம் ஆண்டு பெருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு தேர் பவனி நடந்தது.இதற்காக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார் தேரில் உத்தரிய மாதா சொரூபம் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.அரசகுழி, கொளப்பாக்கம், இருப்புக்குறிச்சி, புதுக்கூரைப்பேட்டை, விருத்தகிரிகுப்பம், நெய்வேலி பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.நேற்று காலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி