உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவிகள் பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவிகள் பிரிந்ததால் கணவர் தற்கொலை

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே மனைவிகள் பிரிந்து சென்ற வேதனையில் கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் வெங்கடேசன்,30; டிரைவர்; இவரது மனைவி ரச்சனா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில் வெங்கடேசன் கடந்த 6 மாதங்களுக்கு முன் தனலட்சுமி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இரண்டு மாதம் மட்டும் வெங்கடேசனுடன் வாழ்ந்த நிலையில் தனலட்சுமியும் பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த வெங்கடேசன் நேற்று மதியம் வீட்டின் அருகே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை