உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணகிரி வாலிபர் கடலுாரில் தற்கொலை

கிருஷ்ணகிரி வாலிபர் கடலுாரில் தற்கொலை

கடலுார், : கடலுாரில் தங்கி வேலை செய்து வந்த கிரஷ்ணகிரி வாலிபர், கடன் தொல்லையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்த ரவி மகன் ரமேஷ் 37; இவரது மனைவி அஸ்வினி 30; மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் ராயக்கோட்டையில் நடத்தி வந்த பேக்கிரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் ஏற்பட்டது.அதனையொட்டி கடந்த 7 மாதங்களுக்கு முன் கடலுார் வந்த ரமேஷ், புதுப்பாளையத்தில் உள்ள மேன்ஷனில் தங்கி, அங்குள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடன் தொல்லை அதிகமானதால் ரமேஷ் நேற்று முன்தினம் தான் தங்கியிருந்து அறையிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார, ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மனைவி அஸ்வினி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ