உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடக்குப்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வடக்குப்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு, : மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் ஸ்ரீமுஷ்ணம் தா.வீ.சே., பள்ளியில் விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான தடகள போட்டி நடந்தது. இதில், வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்று குழுக்களாக தடகள போட்டியில் பங்கேற்றனர்.இதில், துாய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 17 பேர் முதலிடம், 8 மாணவர்கள் இரண்டாமிடம், 5 மாணவர்கள் மூன்றாமிடம் பிடித்தனர்.போட்டிகளில் வென்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அகஸ்டின், தலைமை ஆசிரியர் தேவராஜன், உடற்கல்வி ஆசிரியர் டேவிட் பெர்னாண்டஸ், செல்வராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி பதக்கம் அணிவித்து மாணவர்களை பாராட்டினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை