உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதல் திருமண ஜோடி தஞ்சம்

காதல் திருமண ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம்: பில்லாலி தொட்டியை சேர்ந்த ஞானவேல் மகன் பிரதீஷ், 22; கொத்தனார். இவரும், அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி மகள் சோனியா, 19; என்பவரும் காதலித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, பாதுகாப்பு கேட்டு இருவரும், நெல்லிக்குப்பம் போலீசில் தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சமாதானம் செய்து அனுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி